நிகழ்வு 01 - கருத்தாடல் களம் - பெரியோர்களும் இளையோர்களும்
"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மார்ச் 02 தொடக்கம் மார்ச் 08 வரை கொண்டாடப்பட்டது.மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் (05.03.2025) டேபா மண்டபத்தில் நிகழ்வு 01 இடம்பெற்றது.

"களிப்பூட்டுவதன் மூலம் மகிழ்ச்சியான குடுமபத்தை கட்டியெழுப்புவோம் " எனும் திட்டத்திற்கு அமைவாக இன்று இளையோர் முதியோர்களுக்கிடையிலான கருத்து முரண்பாட்டினை ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் கருத்தாடல் நிகழ்வு இடம் பெற்றது.இக் கருத்தாடல் நிகழ்வில் மட்டக்களப்பு அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன் மகளிர் சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், சமுர்த்தி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.












