மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 2022 புத்தாண்டு கடமை ஏற்றல் வைபவம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது ஊழியர்களால் தேசிய கீதம் பாடப்பட்டது. மேலும், புத்தாண்டை தொடங்கும் வகையில், விழாவில் பொதுப்பணித்துறை உறுதிமொழியை ஊழியர்கள் எடுத்துக்கொண்டனர்.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பிரதேச செயலாளர் வழங்கி வைத்தார்.


















