மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது பாராளுமன்ற உறுப்பினர், வர்த்தக இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கெளரவ ச.வியாழேந்திரன் தலைமையில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் வழிநடத்தலின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் 19.04.2023 நடைபெற்றது. இந்நிகழ்வில் கெளரவ.இரா.சாணக்கியன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டிருந்தார்.


மேலும் இக்குழுக் கூட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரச, அரச சார்பற்ற திணைக்களத் தலைவர்கள், சமூக மட்ட பிரதிநிதிகளும் மண்முனை வடக்கு பிரதேச செயலக சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் பிரதேச செயலகத்தினால் இவ்ஆண்டிற்கு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு, திணைக்களங்களினால் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் நடாத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பான மீளாய்வுகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் பிரதேச செயலக பிரிவு எல்லைக்குள் மிக முக்கியமாக தீர்த்து வைக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் போன்றன கலந்துரையாடப்பட்டன.













