மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 2024ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் 01.01.2024 காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.


இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து உத்தியோகத்தர்களும் அரச நிர்வாக சுற்றறிக்கைக்கமைவாக(25/2023) சேவை உறுதியுரையும் செய்துகொண்டனர்.




அதனை தொடர்ந்து பிரதேச செயலாளரினால் உரையாற்றப்பட்டு பதவியணி நலன்புரிச் சங்கத்தினால் பால்ச்சோறும் வழங்கப்பட்டு இப்புது வருட நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.














