மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழாவானது 23.01.2024 ம் திகதி பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.






பிரதேச செயலக இராஜ கணபதி ஆலயத்தில் புதிர் எடுக்கும் நிகழ்வுடன் பொங்கல் நிகழ்வானதுமிக விமர்சையாக ஆரம்பமானது. இதில் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த பல்வேறு கிளைகளினால் 9 பொங்கல் பானைகள் வைத்து சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்யப்பட்டது.






அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டு அரங்கேற்றப்பட்டது.இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி தலைமை முகாமையாளர் மற்றும் சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

















