
புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவலர்கள் அமைச்சின் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய வெசாக் கண்காட்சி நிகழ்ச்சியானது மண் முனை வடக்கு கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி திருமதி.அமலினி ரஞ்சித் குமார் தலைமையில் மண்மனை வடக்கு கலாசாரம் மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்கள் கலந்து கொண்டார். இதன் போது 18.05.2024 அன்று இடம்பெற்ற வெசாக் அலங்காரக்கூடு கட்டும் போட்டி நிகழ்வில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பண பரிசல்கள் வழங்கப்பட்டது.



நிகழ்ச்சியின் இறுதியில் வெசாக் தன்சல் நிகழ்வு இடம்பெற்றது, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்கள் வெசாக் தன்சல் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் .பார்வையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.















