மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்கான வருடாந்த இரத்த தான முகாம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி டெபா மண்டபத்தில் நடைபெற்றது.



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இவ் இரத்த தான முகாம் இடம் பெற்றது .



இவ் இரத்த தான முகாமில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் திரு விவேகானந்தன் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது ஏராளமான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , கிராமசேவையாளர்கள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் குருதிக்கொடை வழங்கியிருந்தனர்.











