மியான்மார் அரசாங்கத்தின் உதவியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அரிசிப் பொதியானது உணவு ஆணையாளர் திணைக்களத்தினூடாக பிரதேச செயலகங்களுக்கு மிகவும் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு வழங்கும் நோக்குடன் கையளிக்கப்பட்டது.
இவற்றை கையளிக்கும் நிகழ்வானது 11.04.2023 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
வர்த்தக அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கெளரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்களினால் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிப்பிற்குள்ளான 650 குடும்பங்களுக்கு தலா 20kg வீதம் அரிசி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், கிராம நிருவாக உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
ri1
 
ri2
 
ri3
 
ri4
 
ri5
 
ri7
 
ri8

News & Events

23
May2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
May2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

Scroll To Top