மியான்மார் அரசாங்கத்தின் உதவியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அரிசிப் பொதியானது உணவு ஆணையாளர் திணைக்களத்தினூடாக பிரதேச செயலகங்களுக்கு மிகவும் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு வழங்கும் நோக்குடன் கையளிக்கப்பட்டது.
இவற்றை கையளிக்கும் நிகழ்வானது 11.04.2023 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், கிராம நிருவாக உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


















