நிகழ்வு 02 - ஆயுர்வேத மருத்துவ முகாம்
"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மார்ச் 02 தொடக்கம் மார்ச் 08 வரை கொண்டாடப்பட்டது.மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில்(05.03.2025) மண்டபத்தில் நிகழ்வு 02 இடம்பெற்றது.

"ஆரோக்கியமான பெண்கள் தேசத்திற்கு ஒரு பலம் " எனும் தொனிப்பொருளுக்கமைய ஆயுள் வேத மருத்துவ முகாம் இன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.இதில் பிரதேச மக்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் தங்களுக்கான சிகிச்சையினைப் பெற்றுக்கொண்டனர்.ஆயுள்வேத வைத்தியசாலை வைத்தியர்கள் மருத்துவசேவையை வழங்கியிருந்தனர்.












