மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடாத்தும் வர்த்தக கண்காட்சியும் விற்பனை சந்தையும் 11.04.2025 வெள்ளிக்கிழமை புளியந்தீவு தெற்கு வாவிக் கரை வீதி,வீரபத்திரர் ஆலயத்திற்கு முன்பாக மு.ப 9.00 முதல் பி.ப 4.00 மணி வரை இடம்பெற்றது. இந்நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.





பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் உத்தியோகத்தர்களின் ஒழுங்கு படுத்தலின் கீழ் கண்காட்சியும் விற்பனையும் முன்னெடுக்கப்பட்டது .கண்காட்சியில் சிறு தொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன .பெருமளவிலான வாடிக்கையாளர்கள் வருகைதந்து ஆர்வத்துடன் உள்ளூர் உற்பத்தி பொருட்களை ஆர்வத்துடன் கொள்வனவு செய்தனர்.











