சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் அவர்களின் தலைமையில் "புகையிலை உற்பத்தி நிறுவனத்தின் தலையீட்டிலிருந்து நமது பிள்ளைகளையும் இளைஞர்களையும் பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி 31.05.2024 நடாத்தப்பட்டது.






சுகாதார அமைச்சு , சுதேச வைத்திய பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களும் இணைந்து நடத்தும் பாரம்பரிய உணவுக் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு -2024.05.29








கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. வ .வாசுதேவன் அவர்களின் தலைமையில் 27.09.2024 அன்று பிரதேசசெயலகத்தில் நடைபெற்றது.





மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பும் சேவை நலன் பாராட்டும் நிகழ்வானது 28.05.2024 டேபா மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
1. திருமதி.அற்புதமலர் வில்வராசா - SDO
2. திருமதி.கலா மதி சாந்தலிங்கம் - SDO
3. திருமதி.கயல்விழி சிவப்பிரகாசம் - MSO - I
4. திருமதி.சாந்தகுமாரி மகேந்திரன் - MSO-1
5. திருமதி.மிதுனா கோகுலராஜ் - SDO





புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவலர்கள் அமைச்சின் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய வெசாக் கண்காட்சி நிகழ்ச்சியானது மண் முனை வடக்கு கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி திருமதி.அமலினி ரஞ்சித் குமார் தலைமையில் மண்மனை வடக்கு கலாசாரம் மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்கள் கலந்து கொண்டார். இதன் போது 18.05.2024 அன்று இடம்பெற்ற வெசாக் அலங்காரக்கூடு கட்டும் போட்டி நிகழ்வில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பண பரிசல்கள் வழங்கப்பட்டது.



நிகழ்ச்சியின் இறுதியில் வெசாக் தன்சல் நிகழ்வு இடம்பெற்றது, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்கள் வெசாக் தன்சல் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் .பார்வையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.















