"மணல் வீதிகள் அற்ற கிராமங்கள்" எனும் தொனிப்பொருளில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் 20.05.2024 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட பனிச்சையடி கிராம சேவகர் பிரிவின் படித்த பெண்கள் வீதியின் கிறவல் வீதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.




மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாலர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக 29.04.2024 மண்மனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலகத்தின் சிறுதொயில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் "மட்டு முயற்சியான்மை - 2024 Super Fair" எனும் கண்காட்சியும் விற்பனையும் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.










சமுர்த்தி அபிமானி வர்த்தக கண்காட்சியும் விற்பனையும், பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களின் தலைமையில் கொக்குவில் வாராந்த சந்தையில் 2024.04.08ம் திகதி காலை இடம் பெற்றது. தொழில் முயர்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி அவர்களுக்கு சந்தையில் ஒரு சிறந்த இடத்தை பெற்றுக் கொடுப்பதும் எதிர்வரும் சித்திரை புதுவருடத்திற்குரிய பொருட்களை ஒரே இடத்தில் குறைந்த விலைகளில் வழங்குவதுமே இதனுடைய பிரதான நோக்கமாகும்.



மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சித்திரைப் புதுவருட பாரம்பரிய விளையாட்டு விழாவானது 25.04.2024 ம் திகதி வெபர் மைதானத்திலும் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் அதிதியாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் V.ஈஸ்பரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.


இதில் எல்லே, கிரிக்கட், மாவுக்குள் காசு எடுத்தல், தேசிக்காய் ஓட்டம் ,சாக்கு ஓட்டம், வேக நடை ஆண்கள், பெண்கள்,கயிறு இழுத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், தொப்பி மாற்றுதல் ,நிலை தடுமாறுதல், அஞ்சல் ஓட்டம் போன்ற விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.


இவ்விளையாட்டு போட்டியில் உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர், கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட சக அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


இதில் கணக்காளர் தலைமையிலான Yellow அணியானது 82 புள்ளிகளைப் பெற்று முதலிடமும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தலைமையிலான Green(57), Blue(45) முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.


இதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு மண்முனை பிரதேசசெயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடந்து முடிந்த போட்டிகள் அடிப்படியில் முதல் இடத்தினை New Koddamunai விளையாட்டுக்கழகம் 10 தங்கம் 02 வெள்ளி 01 வெண்கலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது . இரண்டாவது இடத்தினை மண்முனை வடக்கு நலன்புரி விளையாட்டு கழகம் 08 தங்கம் 08 வெள்ளி 01 வெண்கலம் பதக்கங்கள் பெற்றதுடன் கடல் மீன்கள் விளையாட்டு கழகம் 04 தங்கம் 04 வெள்ளி 03 வெண்கலம் பதக்கங்கள் பெற்றுள்ளன.இவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வும் 25.04.2024ம் திகதி நடைபெற்றது.


மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்கான வருடாந்த இரத்த தான முகாம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி டெபா மண்டபத்தில் நடைபெற்றது.



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இவ் இரத்த தான முகாம் இடம் பெற்றது .



இவ் இரத்த தான முகாமில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் திரு விவேகானந்தன் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது ஏராளமான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , கிராமசேவையாளர்கள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் குருதிக்கொடை வழங்கியிருந்தனர்.











