மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சித்திரைப் புதுவருட பாரம்பரிய விளையாட்டு விழாவானது 26.04.2023 திகதி பாட்டாளிபுரம் மைதானத்திலும் 27.04.2023 ம் திகதி வெபர் மைதானத்திலும் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் V.ஈஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதைய் தொடர்ந்து. உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன.

இதில் எல்லே, கிரிக்கட், மாவுக்குள் காசு எடுத்தல், தேசிக்காய் ஓட்டம், தேங்காய் துருவுதல்,முட்டி உடைத்தல், சாக்கு ஓட்டம், வேக நடை ஆண்கள், பெண்கள், பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், சங்கீதக் கதிரை, கலப்பு அஞ்சல் ஓட்டம் போன்ற  விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.

இவ்விளையாட்டு போட்டியில் உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக உத்தியோகத்தர் கிராம சேவை உள்ளிட்ட சக அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.இதில் கணக்காளர் தலைமையிலான MN Warriors அணியானது முதலிடமும் உதவி பிரதேச செயலாளர்கள் தலைமையிலான Brave Heart, MN Eagles முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

 


spo1

spo2

spo3

spo4

spo5

spo8

spo9

spo10

spo11

spo12

spo13

spo14

spo15

spo16

spo17

spo18

spo19

spo20

spo21

 

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது பாராளுமன்ற உறுப்பினர், வர்த்தக இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கெளரவ ச.வியாழேந்திரன் தலைமையில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் வழிநடத்தலின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் 19.04.2023  நடைபெற்றது. இந்நிகழ்வில்  கெளரவ.இரா.சாணக்கியன் பாராளுமன்ற உறுப்பினர்  கலந்து கொண்டிருந்தார்.

1681978587337

  1681978587318

மேலும் இக்குழுக் கூட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரச, அரச சார்பற்ற திணைக்களத் தலைவர்கள், சமூக மட்ட  பிரதிநிதிகளும் மண்முனை வடக்கு பிரதேச செயலக சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

1681978587310

1681978587329

இக்கூட்டத்தில் பிரதேச செயலகத்தினால் இவ்ஆண்டிற்கு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு, திணைக்களங்களினால் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் நடாத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பான மீளாய்வுகள்  தொடர்பாகவும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் பிரதேச செயலக பிரிவு எல்லைக்குள் மிக முக்கியமாக தீர்த்து வைக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் போன்றன கலந்துரையாடப்பட்டன.

1681978587351

1681978587357

தற்கால பொருளாதார நெருக்கடியில் மிகவும் பாதிப்பிற்குள்ளான காத்திருப்பு பட்டியலில் உள்ள சிரேஸ்ட பிரஜைகளில் ,CAMID, YMCA,PPPC ஆகிய நிறுவனங்கள் இணைந்து CBM அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் 281 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர். இதில் முதல் கட்டமாக 15 சிரேஸ்ட பிரஜைகளுக்கான ரூபா.5000 பெறுமதியான காசுக் கட்டளை பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் 22.03.2023 பிரதேச செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் உதவி பிரதேச செயலாளர் திரு.எம்.ஆர்.ஷியாஹுல் ஹக், CAMID நிறுவன பணிப்பாளர் திரு.காண்டீபன், சமூக சேவை உத்தியோகத்தர் திரு.ப.ராஜ்மோகன், கிராம நிர்வாக உத்தியோகத்தர் கே.ராஜன், மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு. ப.விஸ்வகோகிலன் மற்றும் பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
ep1
 
ep2
 
ep3
 
ep4
 
ep5
 
ep7
 
மியான்மார் அரசாங்கத்தின் உதவியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அரிசிப் பொதியானது உணவு ஆணையாளர் திணைக்களத்தினூடாக பிரதேச செயலகங்களுக்கு மிகவும் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு வழங்கும் நோக்குடன் கையளிக்கப்பட்டது.
இவற்றை கையளிக்கும் நிகழ்வானது 11.04.2023 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
வர்த்தக அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கெளரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்களினால் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிப்பிற்குள்ளான 650 குடும்பங்களுக்கு தலா 20kg வீதம் அரிசி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், கிராம நிருவாக உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
ri1
 
ri2
 
ri3
 
ri4
 
ri5
 
ri7
 
ri8

"பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்" என்றதொனிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகமொன்று 20.03.2023 திகதி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

po1

மக்கள் மத்தியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் மக்களுக்கும் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை எடுத்துக்காட்டும் வகையிலான விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றினைமட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ நிறுவனத்தினர் சி.பி.எம் நிறுவனத்தின நிதி அனுசரணையுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கொக்குவில் கிராமத்தில் அரங்கேற்றியிருந்தனர்.

po2

இந்நிகழ்விற்கு வை.எம்.சீ.ஏ நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் செ.பிறின்ஸ் அலெக்ஸ்தலைமை தாங்கி நடாத்திய நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுகசேவை உத்தியோகத்தர் ராஜ்மோகன், பிரதேச செயலக சுற்றுச்சூழல் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பிரசாந்தி, மாற்றத்திறனாளிஅமைப்பினர், வை.எம.சீ.ஏ உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

po3

இவ்வீதி நாடகத்தினை கதிரவன் நாடக குழுவினருடன் மாற்றுத்திறனாளிகள் இணைந்து வழங்கியிருந்ததுடன் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டன.இவ்வீதி நாடகம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

po5

po6

po7

po9

 

News & Events

23
மே2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
மே2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top