பொலித்தீன் பாவனையை குறைத்தல் /அதற்கு மாற்றீட்டு பொருட்களை பயன்படுத்தல் எனும் தலைப்பில் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி YMCA நிறுவனத்தினருடன் இணைந்து 14.02.2023 நடத்தப்பட்டது.







Multi Sector Awareness Program was held on 20th January 2023 at Bt/Pillayaradi Nallaiya Vidyalayam







இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம், மண்முனை வடக்கு பிரதேச செயலகம், அறநெறி பாடசாலைகள் மற்றும் ஆலயங்கள் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் உழவர் விழா 27.01.2023 அன்று மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் மண் முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். சிறீதரன் கலந்துகொண்டார்.
பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அறநெறி பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சியாஹுல் ஹக், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான அ.சுதர்சன் மற்றும் ச.பிரணவசோதி, மேலதிக மாவட்ட பதிவாளர் எஸ். சுசிகரன், நிர்வாக உத்தியோகத்தர் கிராம சேவை கே.ராஜன் ஸ்ரீ மாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர்மார்கள், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள்,அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 20.01.2023 அன்று பொங்கல் விழா நிகழ்வானது பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஒவ்வொரு கிளைக்குமென தனித்தனி பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு வெவ்வேறு வகையான பொங்கல் செய்து இந்நிகழ்வானது சிறப்பாக கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















